திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பாரதிபுரம் ஒத்தக்கண் பாலம் வேடப்பட்டி அண்ணாமலையார் ரோடு ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்:- அமைச்சர் ஐ . பெரியசாமி அவரது மனைவி, மகன் செந்தில்குமார் மகள் இந்திரா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
திண்டுக்கல் திமுக வேட்பாளரான செந்தில்குமார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது.
எந்த குற்றமும் இல்லாதவன் தான் வேட்பாளராக நிற்க வேண்டும் மக்களிடம் வந்து நான் யோக்கியன் எனக் கூறி வாக்குகள் கேட்க வேண்டும் நான் 55 ஆண்டுகளா அதிமுக கட்சியில் இருந்து வருகிறேன் எனக்காக நீங்கள் வாக்களித்துள்ளீர்கள்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜி... திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த பளீச் பதில்...!
எங்கள் மீது குற்றம் இருந்தால் ஸ்டாலின் ஐ பெரியசாமி வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் அல்லவா சொத்து சேர்த்துள்ளோம் தப்பாக வாழ்கிறோம் எங்களை யாரும் குறை சொல்ல முடியாது மாடியில் கனமில்லை வழியில் பயமில்லை .
நீதிமன்றத்தில் குற்றவாளியாக உள்ள செந்திலும் அவரது அப்பா பெரிய சாமியும் தைரியமாக வந்து ஓட்டு கேட்கிறார்கள் நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் குற்றவாளிக்கு நீங்கள் ஓட்டு போட மாட்டீர்களே. நாங்கள் தவறாக இருந்தால் எங்கள் மீது வழக்கு போடச் சொல்லுங்கள் என பேசினார்
இதையும் படிங்க: “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!