சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு முருக பக்தர்கள் மாநாடு பயத்தையும், பீதியையும் கொடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக நடந்த எழுச்சி மாநாடு. பழனியில் நடைபெற்ற மாநாடு பக்தியே இல்லாத மாநாடு. பழனியில் நடைபெற்றது நிர்பந்த மாநாடு. மதுரையில் நடைபெற்றதுதான் பக்தர்களுடைய மாநாடு.

திமுக கட்சியோடு திருமாவளவன் மனதளவில் உறவை முறித்துக் கொண்டு, பெயரளவில் மட்டுமே உறவை வைத்துள்ளார். திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளு மே திமுக மீதான அதிருப்தியின் காரணமாகவே திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு வருகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, கூட்டணியில் பிரச்சனை உருவாகி கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது.

திமுக ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அதிமுக தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும். எடப்பாடி பழனிச்சாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அதிமுகவின் எதிர் தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். திமுக ஐடி விங் தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: தீயசக்தி திமுகவை ஓட, ஓட விரட்டாமல் இதை செய்ய மாட்டேன்... ராஜேந்திர பாலாஜி சபதம்...!
எடப்பாடி பழனிச் சாமியை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள். திமுக அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார்.
விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். அதிமுக தலைமை தான் திமுகவிற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும் தலைமை. திமுகவை வெல்ல வேண்டும் என்றால் அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதால், விஜய் பக்க பலமாக அதிமுகவோடும், எடப்பாடியோடு கைகோர்ப்பதுதான் சாலச் சிறந்த முடிவு எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!