தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!
சென்னையிலிருந்து மதுரைக்கு விமான கட்டணம் சாதாரண நாளில் 7,143 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 31,278 ரூபாயாக உயர்ந்துள்ளது சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் சாதாரண நாளில் 7,886 ரூபாயாக இருக்கும் நிலையில் இன்று 16,995 ரூபாயாக உயர்ந்துவிட்டது. சென்னையில் இருந்து திருச்சிக்கு 4 ஆயிரம் ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!