தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை மையமாக விளங்கும் கோயம்புத்தூர் நகரம், அதன் வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தை ஜி. டி. நாயுடு மேம்பாலத்தின் மூலம் எழுதுகிறது. இந்த மேம்பாலம், தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்டப் பாலமாக 10.10 கிலோ மீட்டருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவினாசி சாலையின் மீது உருவாக்கப்பட்ட இந்த உயர்ந்த சாலை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயண நேரத்தை குறைக்கும் ஒரு பெரிய முயற்சியாகத் திகழ்கிறது. இது வெறும் உள்கட்டமைப்பு திட்டமல்ல.
கோயம்புத்தூரின் தொழில்முன்னோடி வரலாற்றை கொண்டாடும் ஒரு அடையாளமாகவும் உருவெடுக்கிறது. இந்த பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜி. டி. நாயுடுவின் பெயரைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் எனும் நகரம், தனது தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புகளுக்காக உலக அளவில் புகழ்பெற்றது. இந்த நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் ஜி. டி. நாயுடு.

ஜி. டி. நாயுடு கண்டுபிடிப்புகள், இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின. 1937இல், அவரது நியூ எலக்ட்ரிக் வொர்க்ஸ் என்ற தொழிற்சாலையில், இந்தியாவின் முதல் உள்ளூர் உற்பத்தி மின்சார மோட்டாரை உருவாக்கினார். இது இந்தியாவின் தொழில்துறை சுயாட்சிக்கு ஒரு மைல்கல். இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜி.டி நாயுடுவின் பெயரை மேம்பாலத்திற்கு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதிப் பெயரை நீக்க சொல்லிட்டு ஜி.டி. நாயுடு பெயரில் சாலை... இதான் திராவிட மாடலா? சீமான் சரமாரி கேள்வி...!
1,179 கோடி ரூபாயில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் இடையில் அமைந்துள்ள பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிலையில் ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பயணிப்பவர்களுக்கு அதிமுகவினர் இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். ஜிடி நாயுடு பாலத்திற்கு நிதி ஒதுக்கியது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் இந்த பாலத்திற்கு முழு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம்... SIT-க்கு எதிர்ப்பு... சிபிஐ விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு...!