தமிழ்நாட்டில் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திமுக அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 1.31 கோடிக்கும் அதிகமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 15-ம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் தவெக தனது தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகைக்காக இல்லத்தரசிகள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் இதுதொடர்பான முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தை தொடருவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது தற்போதைய நிதி நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளாராம். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருந்தாலும், இந்தத் திட்டம் அரசு திட்டம் என்பதால் நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் இந்த வாரத்தின் இறுதியில் வரவு வைக்கப்படும் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா..? தவெக அரசுக்கு MLA காமராஜ் ஆதரவு..!
இதையும் படிங்க: திக்.. திக்.. நிமிடங்கள்..! தவெக அரசுக்கு காங்., CPM, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..! வன்னியரசு கருத்து..!