தவெகவிற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் அர்லேகர் உறுதியாக உள்ளார். இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக கடுமையாக போராடி வந்தது. முதலில் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள், அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 116 பேரின் ஆதரவு தவெகவிற்கு கிடைந்தது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் தருவது தொடர்பாக விசிக அறிவிப்பதற்கு முன்பாகவே, இன்று இரவு 7.10 மணிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேரள மாநிலத்தின் ஆளுநரான அர்லேகர், தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநர் அர்லேகர் தற்போது கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் விசிக ஆதரவு கடிதம் கொடுத்தாலும் அதனை வாங்கவோ, பதவிப் பிரமாணம் செய்து வைக்கவோ ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத்தான் கேரளா செல்லாமல் காத்திருந்தார் ஆளுநர்.
இதையும் படிங்க: பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!
ஆனால் நேற்று ஆளுநரிடம் விஜய் வழங்கிய ஆதரவு கடிதத்தில் அமமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக பொய்யான தகவல் இடம் பெற்றதாக சர்ச்சை வெடித்தது. இதனால் விஜய் விசிகவின் ஆதரவுடன் வந்தாலும், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலை காரணமாக ஆளுநர் அர்லேகர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இரவுக்குள் விஜய் பதவியேற்பது தொடர்பாக முக்கிய முடிவெடுக்க ஆளுநர் தமிழகத்தில் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!