பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னை தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த 17 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது மாணவியிடம் கீர்த்திவாசன் என்பவர் அத்துமீறி உள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்... லபாலியல் வன்கொடுமை செய்து ரோட்டில் வீசிய கொடூரம்...!
அப்போது கல்லூரி மாணவி கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால் சக பயணிகள் பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சென்னை ஜாபர்கான் பேட்டை சேர்ந்த கீர்த்தி வாசனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பேருந்தில் பட்டப் பகலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தர்மபுரியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... மளிகை கடைக்காரருக்கு லாடம் கட்டிய போலீஸ்...!