“குதிரை பேரம்” என்ற இந்த வார்த்தை சமீப காலமாக தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாக மாறி இருக்கிறது. இதற்கு முன்னாடி இந்த வார்த்தை வட இந்திய அரசியலில், அங்கிருக்கக்கூடிய மாநிலங்களில் அதிகளவில் அடிபட்டது. தமிழகத்தில் இந்த முறைதான் நாம் பிரதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அதற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
கடந்த ஜூன் 29ஆம் தேதி ஒரு விவகாரம் வெளிச்சத்திற்கு வருகிறது. சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு, தவெக எம்எல்ஏ, ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி பேரம் பேசப்பட்டதாக, அவர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்... விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை... மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்...!
அதாவது, சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் என்றால், இது ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியுமா என்று கேட்டால், அரசியல் வல்லுநர்கள் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், சபாநாயகருக்கான அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது ஆட்சிக்குச் சிக்கலைக் கொடுக்கும் என்று மட்டும் சொன்னார்கள். ஆட்சி கவிழாது, ஆனால் சிக்கல் உறுதி என்பதுதான்.
இதைச் சார்ந்து, திமுகதான் இவர்களிடம், இந்த தவெக எம்எல்ஏக்களிடம் பேசியதாக, தவெக எம்எல்ஏ தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தன்னிடம் மட்டும் இல்லாமல், இன்னும் நிறைய எம்எல்ஏக்களிடம் பேசி இருக்கிறார்கள் என்றும் அவர் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இதுவரைக்கும் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருநாவுக்கரசு, நரேஷ் தியாகராஜன் உள்ளிட்ட 14 பேர் இந்தப் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், ஜூலை 8ஆம் தேதி என்ன நடந்தது?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்குமே சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுத்துவிடுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 4ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை என்ற ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. சிபிஐ விசாரணை கோரிய வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே, இந்தக் குதிரை பேர விவகாரம் தொடர்பாக பாஸ் பட்டனை அழுத்திவிட்டதாக கூறப்பட்டது. அதாவது இடைக்காலத் தடை விதித்திருக்கிறார்கள் என்றால், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்ன காய்நகர்த்தலை எடுக்கப் போகிறார்கள், முன்னெடுக்கப் போகிறார்கள் அரசியல் கட்சிகள்? குறிப்பாக தவெக வெர்சஸ் திமுக என்று போய்க்கொண்டிருக்கிறது என்ற நிலையில்தான் உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் போயுள்ளது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுதான் விசாரணைக்கு வர இருக்கிறது.
எனவே, தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு தொடர்பாக, இளையராஜா எம்எல்ஏ அவர்கள் கொடுத்த அந்தப் புகார், அது தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை உச்சநீதிமன்றமும் விசாரிக்க இருக்கிறது.
இந்த விசாரணையின் முடிவில் யார் பக்கம் இந்தத் தராசு சாய இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இரண்டு கட்சிகளுமே தற்போது முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு எப்படி போகப்போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தீயாய் பரவிய வீடியோவை திடீரென கையில் எடுத்த அமைச்சர் கீர்த்தனா... பரபரப்பான தவெக மேடை...!