• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தலைமுடிக்கு இத்தனை மவுசா? ரூ.1 கோடி மதிப்பிலான தலைமுடி திருட்டு.. கதறி துடிக்கும் உரிமையாளர்..!

    பெங்களூருவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டு இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புடைய தலை முடியை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 08 Mar 2025 10:56:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    human-hair-stolen-from-godown-in-bengaluru

    மனிதனின் முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதே சிகை அலங்காரம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தலைமுடியை ஸ்டைலாக கோதி விடுவது போல் தாங்களும் செய்து பார்க்க வேண்டும் என்பது தான் இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும். ஆனால் சிறுவயதிலேயே ஏற்படும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும் சரியான அடர்த்தியில் முடி வளர்ச்சி இல்லாமல் சிரமப்படுகின்றனர். சிலருக்கு வயதாக வயதாக முடி அடர்த்தி மட்டுமல்லாமல் நீளமும் குறைந்து போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தான் விக் எனப்படும் செயற்கை முடி மனிதர்களுக்கு பெரு உதவி அளித்து வருகிறது. 

    Bengaluru

    வழுக்கை விழுந்தவர்கள் மட்டுமல்லாமல், வித விதமான சிகை அலங்காரத்தை விரும்புவர்களும் இதுபோன்ற விக்கை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய பெண்களின் தலைமுடிக்கு தனி மவுசே உள்ளது. நம் பெண்கள் வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, சீயக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை பட்டுபோல் பராமரிக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாகவே நமது பெண்களின் தலைமுடிக்கு ஜீன் மூலம் ஊட்டச்சத்து கடத்தப்பட்டு வருகிறது. இதனாலேயே வெளிநாடுகளில் இந்திய பெண்களின் தலைமுடிக்கு தனி கிராக்கி இருப்பதாக கூறுகின்றனர் ஏற்றுமதியாளர்கள். இந்நிலையில் பெங்களூருவில் வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான தலைமுடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: தமிழ் நாடு- கேரளாவை பாஜகவின் வசமாக்கத் திட்டம்..! ஆர்.எஸ்.எஸ் உருவாக்கும் புதிய சூத்திரம் ..!

    Bengaluru

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணா. வயது 73. தலைமுடிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.  தலைமுடிகளை சேமித்து வைக்க, லட்சுமிபுரம் அருகே சிறிய குடோன் ஒன்றும் வைத்துள்ளார். கோயில்களில் காணிக்கையாக கிடைக்கும் முடி, சிலர் தாமக முன்வந்து கொடுக்கும் முடி என கிலோ கணக்கில் முடிகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு கிடங்கின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஆறு பேர், கிடங்கிற்குள் 27 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த, தலைமுடிகளை திருடி உள்ளனர். அவர்கள் ஜீப்பில் எடுத்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து வெங்கடரமணா சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    Bengaluru

    இந்நிலையில், தலைமுடி திருடு போனது குறித்து வெங்கடரமணா கூறுகையில், வெளிநாடுகளில் நம்ம ஊர் தலைமுடிக்கு மவுசு அதிகமாக உள்ளது. தலைமுடியை பயன்படுத்தி விக் தயாரிக்கின்றனர். முதலில், எனக்கு ஹெப்பாலில் தான் குடோன் இருந்தது. 20 நாட்களுக்கு முன் தான் இங்கும் குடோன் திறந்தேன். 20 நாட்களுக்குள் நோட்டமிட்டு, குடோனில் இருந்து 830 கிலோ எடை கொண்ட தலை முடிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என சோகமாக கூறினார். திருடப்பட்ட தலைமுடியின் மதிப்பு வெளிநாட்டு சந்தைகளில் 80 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிவித்தார். 

    Bengaluru

    தலைமுடிகளை திருடி சென்றவர்கள் தெலுங்கில் பேசியதாகவும் கூறினார்.  மர்ம நபர்கள் தெலுங்கில் பேசியதை பக்கத்து கடையை சேர்ந்த ஒருவர் கவனித்து உள்ளார். அவர்கள் முடியை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்தனர் என்று நினைத்துள்ளார். திருட வந்ததாக நினைக்கவில்லை என்றும் சொன்னார். இந்நிலையில் வெங்கட்ரமணாவின் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பெங்களூருவில் ஒரு கோடி மதிப்பிலான தலைமுடிகள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share