• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    முதன் முறையாக இன்டர்போல் வெளியிட்ட சில்வர் நோட்டீஸ்... கருப்பு பணம்- கடத்தல்காரர்கள் இனி தப்பவே முடியாது..!

    முதல் முறையாக வெளியிடப்பட்ட இன்டர்போலின் சில்வர் நோட்டீஸின் முக்கிய நோக்கம் குற்றச் சொத்துக்களைக் கண்டறிவது.
    Author By Thiraviaraj Sat, 11 Jan 2025 14:06:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    interpol-issued-first-silver-notice-what-work-does-inte

    சர்வதேச காவல் துறையான இண்டர்போல் சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு. இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.

    இந்நிலையில், ‘இன்டர்போல்’ புதிய எச்சரிக்கையாக சில்வர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து தகவல்களைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
    குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களும், குழுக்களும் வெளிநாடுகளில் மறைத்துவைத்திருக்கும் சொத்துகளைக் கண்டுபிடிப்பதற்கு சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உதவ அந்தப் புதிய எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த புதிய சில்வர் நோட்டீஸ் அறிவிப்பால் இந்தியாவிற்கும் உதவி கிடைக்கும். முதல் முறையாக வெளியிடப்பட்ட இன்டர்போலின் சில்வர் நோட்டீஸின்  முக்கிய நோக்கம் குற்றச் சொத்துக்களைக் கண்டறிவது. இத்தாலி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகு இந்த முதல் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு மாஃபியாவின் சொத்து பற்றிய தகவல்கள் தேடப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..

    தங்கள் கருப்புப் பணத்தை மற்ற நாடுகளுக்கு மாற்றிய குற்றவாளிகளை கண்காணிக்க முடியும். இந்த அமைப்பு, சுமார் 52 நாடுகளுடன் இணைந்து, நவம்பர் 2025 வரை இந்தத் திட்டத்தில் பணியாற்றும். சில்வர் டிஃபியூ‌‌ஷன்ஸ்’ மூலம், மோசடி, ஊழல், போதைப்பொருள் கடத்தல், சுற்றுப்புறக் குற்றங்கள், மற்ற கடுமையான குற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சொத்துகள் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் தகவல் கோரலாம் என்று இன்டர்போல் கூறியுள்ளது.

    interpol

    “மோசடியில் சம்பந்தப்பட்ட சொத்துகள், வாகனங்கள், நிதிக் கணக்குகள், வர்த்தகங்கள் உள்ளிட்டவை பற்றி தகவல் பெறுவதற்கும் அவற்றை அடையாளம் காண்பதற்கும் அவற்றின் இடங்களைக் கண்டுபிடிக்கவும் உதவி வழங்கப்படும்” என்று இன்டர்போல் தெரிவித்தது.

    இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய சட்டங்களின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்ய, மீட்க பயன்படுத்தப்படலாம்.
    அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு நோட்டீஸை இன்டர்போல் செயலகம் மதிப்பாய்வு செய்யும்.

    தற்போது இன்டர்போலிடம் 8 வகையான வண்ண அடிப்படை அறிவிப்புகள் உள்ளன. இப்போது வெள்ளியைச் சேர்த்தவுடன், இந்த எண்ணிக்கை ஒன்பதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் குறிப்பிட்ட தகவல்களைப் பெற இந்த வண்ண அறிவிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

    காணாமல் போனவர்களையோ அடையாளம் காண முடியாதவர்களையோ கண்டுபிடிக்க மஞ்சள் நோட்டீஸ் பயன்படுத்தப்படுகின்றன. ப்ளூ நோட்டீஸின் உதவியுடன், ஒரு நபரைப் பற்றிய அதிகபட்ச தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய கருப்பு அறிவிப்பு பயன்படுத்தப்படுகிறது. ஒரு குற்றச் செயல் குறித்து ஒரு நபரை எச்சரிக்க கிரீன் நோட்டீஸ் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு தீவிரமான மற்றும் உடனடி ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்க ஆரஞ்சு நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.

    குற்றவாளிகள் பயன்படுத்தும் முறைகள் அல்லது உபகரணங்கள் பற்றிய தகவல்களைப் பெற ஊதா அறிவிப்பு பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் தவிர, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒரு சிறப்பு நோட்டீஸையும் வெளியிட்டுள்ளது. அது வெள்ளி நோட்டீஸ். இது தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுகிறது.

    நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் அளித்த எச்சரிக்கைக்குப் பிறகு  இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

    உலகின் 80% நாடுகளால் குற்றவியல் சொத்துக்களை திறம்பட பறிமுதல் செய்ய முடியவில்லை என்று எலிசா டி அண்டா மட்ராசோ கூறினார். அதனால்தான் இப்படி ஒரு நோட்டீஸை இண்டர்போல் வெளியிட்டுள்ளது. பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளின் பெயர் இந்தியாவிடம் உள்ளது. இவர்களின் கருப்பு பணம் எவ்வளவு வெளிநாடுகள் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு துல்லியமான மதிப்பீடே இல்லை. 

    இன்டர்போல் அறிமுகம் செய்துள்ள இந்த சில்வர் நோட்டீஸ், இந்தியாவுக்கு உதவியாக இருக்கம். உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைப்பவர்கள், சொத்துகளை குவிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த சில்வர் நோட்டீஸ் இந்தியாவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: "லிவ் இன் பார்ட்னர்" காதலி கொலை; உடலை, 6 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்து பூட்டிய கொடூரன் கைது...

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share