• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உளவாளி கைது.. வசமாக சிக்கியது பாகிஸ்தான்.. அடித்து நொறுக்க காத்திருக்கும் இந்தியா..!

    இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு பணத்திற்காக விற்ற ஐ.எஸ்.ஐ உளவாளியை ராஜஸ்தானில் இந்திய உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Fri, 02 May 2025 11:18:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    isi-spy-pathan-khan-arrested-from-jaisalmer

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதை அடுத்து பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் உள்ளூர் பயங்கரவாதிகள், உளவாளிகளை கண்டறிந்து களை எடுக்கும் பணியில் இந்தியா அதிரடி காட்டி வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் போன்ற இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து 8 நாட்களாக எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. 

    பாகிஸ்தான் இராணுவம் இரவில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் இருந்து எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், நாடு தழுவிய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், ராஜஸ்தானில் உள்ள உளவுத்துறை அமைப்புகள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் உளவாளி ஒருவரை கைது செய்துள்ளன.

    isi spy

    ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் பதான் கான். வயது 40. இவரது உறவினர்கள் பலர் பாகிஸ்தானில் வசிக்கின்றனர். இந்த நிலையில் பதான் கான் கடந்த 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று உள்ளார். அங்கு உறவினர்களை சந்தித்தது மட்டும் அல்லாமல், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ  உளவுத்துறை அதிகாரிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அதன் மூலம் அவர்களிடம் பணம் பெற்று இந்தியாவின் ராணுவ ரகசியங்களை அவர் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு விற்றதாக கூறப்படுகிறது. பதான் கான் அந்த பயணத்திற்கு பிறகும் பல முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்து உள்ளார்.

    இதையும் படிங்க: எல்லையில் தினமும் துப்பாக்கிச்சூடு.. 4 வது நாளாக தொடரும் பதற்றம்.. இந்தியா பதிலடி தீவிரம்..!

    isi spy

    அவர், இந்திய எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஜெய்ப்பூரில் அவர்மீது 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பதான் கான் நீண்ட காலமாக பாகிஸ்தான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார். விசாரணையின் போது, ​​அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பது கண்டறியப்பட்டது. 

    இதன் பின்னர், அவர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு மையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் ஐஎஸ்ஐ அமைப்பில் பணி புரியும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவின் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு மையத்தில் குற்றம் சாட்டப்பட்ட பதான் கானிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ராணுவம் தொடர்பான தகவல்கள் கசிந்ததற்கான வலுவான ஆதாரங்கள் அவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    isi spy

    ஜெய்சால்மரின் ஜீரோ ஆர்.டி. பகுதியில் உள்ள மோகன்கர் கிராமத்தைச் சேர்ந்த பதான் கான், ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, அவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் மிக ஆழமான தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆதாரங்களின்படி, பதான் கான் இராணுவத்தின் சில முக்கிய பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தார். விசாரணையின் போது இன்னும் பெரிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. 

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு வேவு பார்த்து தகவல் அனுப்பியதாக ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், நாட்டின் உள்துறை பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரக்கூடும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: இந்தியாவிற்குள் 'ஆப்பிள்' போய்விடக்கூடாது.. பாக்-ஐ ஏவிய சீனா- பஹல்காம் தாக்குதலில் பகீர்..!

    மேலும் படிங்க
    சொத்து விற்க பாஜகவினரை நாடியது ஒரு குத்தமா? ஆட்டயப்போட்டு மாட்டிகொண்ட சசிகலா புஷ்பா!! நடந்தது என்ன?

    சொத்து விற்க பாஜகவினரை நாடியது ஒரு குத்தமா? ஆட்டயப்போட்டு மாட்டிகொண்ட சசிகலா புஷ்பா!! நடந்தது என்ன?

    அரசியல்
    ரொம்ப மகிழ்ச்சி.. நம் உறவு இன்னும் வலுப்பெறட்டும்.. குரோஷியா பிரதமருக்கு மோடி நன்றி..!

    ரொம்ப மகிழ்ச்சி.. நம் உறவு இன்னும் வலுப்பெறட்டும்.. குரோஷியா பிரதமருக்கு மோடி நன்றி..!

    இந்தியா
    இந்த விஷயத்தில் உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

    இந்த விஷயத்தில் உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

    தமிழ்நாடு
    கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!

    கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!

    இந்தியா
    அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

    அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

    இந்தியா
    மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

    மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

    அரசியல்

    செய்திகள்

    சொத்து விற்க பாஜகவினரை நாடியது ஒரு குத்தமா? ஆட்டயப்போட்டு மாட்டிகொண்ட சசிகலா புஷ்பா!! நடந்தது என்ன?

    சொத்து விற்க பாஜகவினரை நாடியது ஒரு குத்தமா? ஆட்டயப்போட்டு மாட்டிகொண்ட சசிகலா புஷ்பா!! நடந்தது என்ன?

    அரசியல்
    ரொம்ப மகிழ்ச்சி.. நம் உறவு இன்னும் வலுப்பெறட்டும்.. குரோஷியா பிரதமருக்கு மோடி நன்றி..!

    ரொம்ப மகிழ்ச்சி.. நம் உறவு இன்னும் வலுப்பெறட்டும்.. குரோஷியா பிரதமருக்கு மோடி நன்றி..!

    இந்தியா
    இந்த விஷயத்தில் உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

    இந்த விஷயத்தில் உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

    தமிழ்நாடு
    கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!

    கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!

    இந்தியா
    அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

    அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

    இந்தியா
    மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

    மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share