அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை வாபஸ் பெறப் போவதாகக் கரூர் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கரூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றிக்கு எதிராக, தவெக சார்பில் போட்டியிட்ட மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மதியழகன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்தார்:

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது அதிமுகவிலிருந்து விலகி, ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துவிட்டதால், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்தத் தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பாக நீதிமன்ற விதிகளின்படி முறையான மனுவாக (Petition) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதியழகன் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கையும் தவெக வேட்பாளரே வாபஸ் பெற முன்வந்திருப்பது கரூரின் அரசியல் சமன்பாடுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!