தனது உயர்ந்த பண்பின் காரணமாக அமைந்த பெயராலேயே இறுதிவரை அழைக்கப்பட்ட தலைவர் ‘காயிதே மில்லத்’. முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். இதற்கு உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்று பொருள்.

அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை அனைத்து தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். குறிப்பாக 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார் காயிதே மில்லத்.
இதையும் படிங்க: சிறுவர்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தொழிலாளி.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!
இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபுவின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நெல்லையில் அமையவுள்ள நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயிதே மில்லத் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;
எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர் - தலைவர் கலைஞரின்மீது அன்பைப் பொழிந்தவர் - 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணைநின்றவர் - நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்!

திரு. #காயிதே_மில்லத் அவர்கள் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தூய்மை மிஷன்': அரசுக்கு எவ்ளோ பொறுப்போ.. மக்களுக்கும் அதே பொறுப்பு இருக்கு - முதல்வர் ஸ்டாலின்..!