தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி போதைப் பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களால் காளியம்மன் கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

6 வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், இனிமேலும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார் என்ற நம்பிக்கை துளியும் கிடையாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மையிலேயே போதை வஸ்துக்களை தடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட முதலமைச்சர் ஆக இருந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்திருக்க வேண்டும்.,எங்கே கிடைத்தது என்று சொல்லுங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியிருக்க வேண்டும். மாறாக சபாநாயகர் முதற்கொண்டு 21 பேரின் பதவி பறிப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக கூறினார்.

அந்த யோக்கிய சிகாமணி இதைப்பற்றி பேசுவது என்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா மீண்டும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அச்சாணி இல்லாத அரசு.., அது போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி..!