வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் வியூகத்தின் மிக முக்கியப் பகுதியான தென் மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மாநாடு மதுரையில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் மாவட்டப் பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று நடைபெற்றது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பேசுகையில், திமுகவின் வளர்ச்சியையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தேவையையும் வலியுறுத்தினார். "2011-ல் மதுரையில் 0 வெற்றி, 2016-ல் 2 வெற்றி, 2021-ல் 5 வெற்றி என திமுக உயர்ந்துள்ளது. மக்களின் அணுகுமுறையால்தான் இந்த செல்வாக்கு அதிகரித்துள்ளது. "திமுகவின் செயல்திறன் உயர்ந்துவிட்டது; கட்சியின் தகவல்கள் உடனுக்குடன் உடன்பிறப்புகளுக்குக் கிடைக்கிறது. SIR (சமூக நலப் பணிகள்) பணிகளில் திமுக செய்ததைப் போல வேறு எந்தக் கட்சியும் செய்யவில்லை. மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவதே இலக்காக உள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
தென் மண்டலத்தில் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் வசதிகள் மதுரையில் சிறப்பாகச் செய்யப்படும்.
இதையும் படிங்க: “மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி மாநாடு!” சேலத்தில் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாகப் பதவியேற்கவும், திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்கவும் இந்த மாநாடு முதல் படியாக அமையும். மதுரையில் 10-க்கு 10 இடங்களை வென்று முதல்வரிடம் சமர்ப்பிப்போம். உயிரோட்டமான இயக்கம் திமுக: அமைச்சர் தங்கம் தென்னரசு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாகிகளை உற்சாகப்படுத்திப் பேசினார்.
அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் தளபதி மற்றும் மணிமாறன் ஆகிய மும்மூர்த்திகள் இணைந்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவார்கள். முதல்வர் இந்த மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார்.
திமுகவினர் கூடி கலைகிற காகங்கள் அல்ல, மழை பொழிகிற மேகங்கள். பாண்டிய நாட்டின் பெருமையை உலகிற்குச் சொன்ன சுந்தரபாண்டியன் போல, திமுகவின் சாதனைகளை உலகிற்குச் சொல்லும் மாநாடாக இது அமையும். பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினத்தில் இந்த மாநாடு நடப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்..! மனைவியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பகீர் தகவல்..!