தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்களின் போது திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அளித்த பதில் பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவதாகவும், அவர்களைப் பார்த்து ஓடுவதாகவும் திமுக தரப்பில் விமர்சனம் எழுந்த நிலையில், அமைச்சர் ஆனந்த் அதை நேரடியாக மறுத்து பேசினார்.
அவரது பதில் தெளிவாகவும், தைரியமாகவும் இருந்தது. அதேசமயம் முதலமைச்சர் விஜய்யின் பாணியைப் பின்பற்றுவதே தங்களது நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.துரை சந்திரசேகரன் பேசும்போது, ஆட்சியாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்றும், அவர்களை வச்சி எடக்கு முடக்கா கேள்விகள் கேட்க வைத்து தவிர்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது போன்ற விமர்சனங்கள் அரசின் வெளிப்படைத்தன்மை மீதும், ஊடகங்களுடனான உறவு மீதும் கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஆனந்த் எழுந்து நின்று பேசினார். அவரது வார்த்தைகள் நேரடியாகவும், அழுத்தமாகவும் அமைந்தன. “பத்திரிகையாளர்களை வச்சி எடக்கு முடக்கா கேள்வி கேட்க வைக்கிறீங்க என்று சொல்கிறீர்கள். இதெல்லாம் நாங்க ஓடல, பயப்படல. நாங்க எங்க முதலமைச்சர் பாணியில சாதிச்சு காட்டுவதே நோக்கம்” என்று அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!
பத்திரிகையாளர்களைப் பார்த்து கிடுகிடுனு வேகமாக ஓடுவதாகச் சொல்லப்படுவதை அவர் மறுத்தார். “பத்திரிகையாளர்கள பார்த்தா ஏன் கிடுகிடுனு வேகமா போறீங்க?” என்று கேள்வி எழுப்பியதற்கு அவர், நாங்கள் யாருக்கும் பயப்படுவதில்லை என்று உறுதியாகப் பதிலளித்தார். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதால், எடக்கு மடக்காக கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!