தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றியும், தனது தந்தையார் பெரியசாமி பற்றியும், தன்னைப் பற்றியும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றியும் அவதூறாக பேசியிருப்பதை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், வன்மையாக கண்டித்துள்ளார்.
மழை வெள்ள நேரத்தில் தூத்துக்குடியில் யாருமே களத்துக்கு வரவில்லை என வாய்க்கூசாமல் பேசியிருக்கிறார் என்று குற்றம்சாட்டிய அவர், எம்எல்ஏ என்கிற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம் என்றும், அன்றைய துணை முதல்வர், தொகுதியின் எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினர் என்றும் தெரிவித்தார்.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி பார்க்காமல் புறமுதுகை காட்டி ஓடிய நீங்கள் இதை பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல் குமார் பேசியுள்ளார் என்று சுட்டிக்காட்டிய கீதா ஜீவன், அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை என்றும், வசூல் செய்ததாக கூறும் நீங்கள் அதை நிருபிக்க முடியுமா, முடியாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பழநி நில மோசடி விவகாரம்... 100% நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!.
வாய் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிடுங்கள் என்று அறிவுறுத்திய அவர், பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல் குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: TVK ஆட்சியில் கமிஷனே கிடையாது..! நாகர்கோவில் லாக்கப் டெத்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!