பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார்.இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பீகாரில் நடந்த இடைத்தேர்தல்கள் முடிவுகளும் என்று வெளியாக உள்ளன. இடைத்தேர்தலுக்கு பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
ஜம்மு & காஷ்மீர்: Budgam, Nagrota
ராஜஸ்தான்: Anta
ஜார்கண்ட்: Ghatshila
தெலுங்கானா: Jubilee Hills
பஞ்சாப்: Tarn Taran
மிசோரம்: Dampa
ஒடிஷா: Nuapada ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடந்தன.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பீகார் வாக்கு எண்ணிக்கை... இந்தியா கூட்டணி அதிர்ச்சி... தேஜஸ்வி தொடர்ந்து பின்னடைவு...!
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், மிசோரம் டம்பா தொகுதியில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தனது சொந்தத் தொகுதியில்..! காவல் நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்...!