தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கல்லூரிகளை முதல்வர் திறந்து வைத்து இருந்தார்.

கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம்- விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவாரூர் மாவட்டம்- முத்துப்பேட்டை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்பட்டன. அவற்றை முதலமைச்ச ஸ்டாலின் தொடங்கி வைத்து இருந்தார்.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு முன்பே பாலம் சேதம்.. ஊழல் குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்..!

இந்த நிலையில், மேலும் 4 புதிய கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை,திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய கலை கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 1,120 பேர் உயர்கல்வி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..! குடும்பத்தினருக்கு ஆறுதல்..!