சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் விழா மேடையில் உரையாற்றினார். அப்போது, மதுரையில் அமித் ஷா பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது; கட்டாயத்தின் அடிப்படையில் அமித் ஷா பேச்சுக்கு விளக்கம் சொல்கிறேன். இந்திய அரசு அளிக்கும் திட்டங்களை மடைமாற்றி விடுவதாக திமுக மீது அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். குடிநீர் திட்டம் ஆனாலும் சரி, வீடு கட்டும் திட்டம் ஆனாலும் சரி ஒன்றிய அரசு ஒதுக்க கூடிய பணத்தை வைத்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு மாநில அரசு தான் கூடுதல் பணத்தை கொடுக்கிறது. பிரதமர் பெயர் வைத்துள்ள திட்டங்களுக்கு கூட 50 சதவீதம் நிதியை மாநில அரசு தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டிருக்க சட்டை என்னோடது என்ற படையப்பா படத்தின் டயலாக்கை கேட்டு இருப்பீர்கள். அதுபோல ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி கொடுத்து வருவதாகவும் இதில் எந்த வகையில் நாங்கள் மடை மாற்றுகிறோம் என்பது குறித்து அமைச்சர் கூற வேண்டும் என தெரிவித்தார். ஒன்றிய அரசு தான் தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்பு திட்டத்தையும் தராத அரசு என்றும் திட்டங்களுக்கு ஒதுக்க கூடிய பணம் முழுமையாக வந்து சேர்வதில்லை. மதுரைக்கு வந்த அமித் ஷா அவர்களே எய்ம்ஸ் நிலை என்ன என்று பார்த்தீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என ஏராளமான பணிகளை முடித்துள்ளோம். இதுதான் பிஜேபி மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா! யுபிஎஸ்சி தேர்வில் இதுவரை இல்லாத சாதனை... தமிழக மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு

10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் என்ன மருத்துவமனையா இல்ல விண்வெளி ஆராய்ச்சி நிலையமா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒழுங்காக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்து இருக்கலாம்., மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ஒரே ஒரு சிறப்பு திட்டத்தை சொல்லுங்கள். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். மதுரை வந்த அமைச்சர் இப்படி மற்றொரு அமைச்ச தமிழர்களின் தொன்மையை நிராகரிக்குமாறு பேசி இருக்கிறார்.

தமிழர்களின் தொன்மையை அழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அதிமுக - பாஜக இடையே மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்., திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: ஓசி பஸ்ஸா! இது என்ன கோபாலபுரத்து பணமா? திமுக எம்.எல்.ஏ.வின் ஆணவ பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..!