முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகவும், அதற்காக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் சமீபத்தில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இடங்களில் செய்திகள் பரவின. இந்த செய்திகளுக்கு ஓ.பி.எஸ் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் தற்போது தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக போடிநாயக்கனூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரியில் அவர் தி.மு.க.வில் இணைந்த பிறகு, அக்கட்சியின் கொள்கைகளுக்கு உறுதியான ஆதரவு தெரிவித்து வருகிறார். தி.மு.க.வை திராவிட இயக்கத்தின் மூலக்கட்சியாகவும், அடித்தளமாகவும் அவர் பலமுறை புகழ்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எஸ் அதிர்ச்சியுடன் “என்னது நான் தவெகவில் இணைகிறேனா? யார் சொன்னது?” என்று கேட்டார். இது அரசியல் சூழ்ச்சியாளர்கள் பரப்பும் வதந்தி மட்டுமே என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இத்தகைய பொய் செய்திகளை பரப்புவதை வன்மையாகக் கண்டித்த அவர், மக்கள் இத்தகைய வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தேனி மாவட்டத்தில் உள்ள தன் தொகுதியில் செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ்., தி.மு.க. தலைமையுடன் நல்லிணக்கத்துடன் இருப்பதாகவும், எந்தவித அதிருப்தியும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: படம் ஓட்ட ஒத்திகை பாக்குறீங்களா CM SIR.? கர்நாடகா போக துடிக்கிறீங்களே.! அப்பாவு விமர்சனம்..!
தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரின் ஆதிக்கம் தொடர்பான ஊகங்களையும் அவர் மறுத்தார். தி.மு.க.வின் திராவிட கொள்கைகளில் உறுதியாக நின்று செயல்படுவதே தன் நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.இந்த மறுப்பு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக ஆட்சியின் கீழ் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இணைவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகும் நிலையில், ஓ.பி.எஸ். போன்ற மூத்த தலைவரின் தெளிவான மறுப்பு தி.மு.க.வுக்குள் அவரது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!