மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறிய குற்றச்சாட்டு இன்று நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது நிகழ்ந்தது. மக்களவையில் பிரதமர் மோடி தனது பதிலுரையை ஆற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.
பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கை அருகே கூடி, பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை கடுமையான குழப்பத்திற்குள்ளானது மற்றும் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி அன்று அவையில் பேச முடியாமல் போனது. இன்றைய தினம் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பிரதமர் பதிலுரை ஆற்ற இருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் பிரதமரின் இருக்கை அருகே எதிர்பாராத சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அத்தகைய சம்பவம் நடந்திருந்தால், நாட்டின் ஜனநாயக மரபுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார். இதனால், அத்தகைய ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் நேரடியாகக் கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு அதிகார மமதை! சும்மா விட முடியாது! எங்களுக்கு திருப்பி அடிக்க தெரியும்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!
காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா இருவரும் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் கூறியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பான கருத்தை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனத்தை தெரிவித்துள்ளார். சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்றும் அகிம்சையை காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட ரொம்ப உறவாடாதீங்க! காங்., மாவட்ட தலைவர்களுக்கு மேலிடம் போட்ட வாய்மொழி உத்தரவு!