பொங்கல் விடுமுறை தொடங்கும் முன்பே சென்னை, கோவை, பிற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கினாலும், ரயில் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்றால் பலரும் ஆம்னி பேருந்துகளை நம்பியே செல்வார்கள். இந்த நேரத்தில் தேவை அதிகரிப்பதைப் பயன்படுத்தி, சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது வழக்கமாகிவிட்டது.
உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமான காலத்தில் 700-1000 ரூபாய் இருக்கும் கட்டணம், பொங்கல் நெருங்கும்போது 3000 ரூபாய் வரைக்கும் செல்லும். கோவைக்கு 1000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாகவும், நெல்லைக்கு 1400 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் உயர்வது புகார்களில் அடிக்கடி வருகிறது. சில சமயங்களில் ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஒரு டிக்கெட் 5000 ரூபாய் வரைக்கும் கேட்பதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். இது பயணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், பொருளாதார சுமையையும் ஏற்படுத்துகிறது.இதனால் பயணிகள் மத்தியில் கோபம் அதிகரிக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கூட இதை கண்டித்து பேசியுள்ளனர்.

இந்த நிலையில் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை ஏற்படுவது தொடர்பாக புகார் அளிக்க வசதியாக எண்கள் அறிவி அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக் குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆண்டுதோறும் கட்டண கொள்ளை... வாட்டி வதைக்கும் வசூல் வேட்டை..! TTV தினகரன் காட்டம்..!
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151, இணைப் போக்குவரத்து ஆணையரகங்கள் - சென்னை (வடக்கு) 99442 53404, சென்னை (தெற்கு) 97905 50052, மதுரை - 90953 66394, கோவை 91235 93971, துணைப் போக்குவரத்து ஆணையரகங்கள் - விழுப்புரம் 9677398825, வேலூர் 98400 23011, சேலம் 78456 36423, ஈரோடு 80569 40040, திருச்சி 90660 32343, விருதுநகர் 90257 23800, தஞ்சாவூர் 95850 20865, திருநெல்வேலி 96981 18011 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்னி பஸ் கட்டண கொள்ளை... மக்கள் புகார் கொடுக்க முன் வருவதில்லை..! அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்..!