நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள பெட்டைக்குளத்தில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் காட்டுப்பகுதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 4 பேர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே விரைந்து வந்த எஸ்.பி. மற்றும் தடவியல் துறையினர் தீவிர சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆள் நடமாட்டமற்ற பனங்காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த கார் மற்றும் அதில் இருந்த 4 உடல்களை மீட்ட போலீசார் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா? அல்லது மது போதையில் நடந்த விபத்தா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் கைப்பற்ற ஆதாரங்கள் மற்றும் தடவியல் சோதனைகள் மூலமாக கூடுதல் விவரங்கள் கிடைக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ள போலீசார், முதற்கட்டமாக காரில் கிடந்த 4 சடலங்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திசையன்விளை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்.. பரிசு விநியோகத்தை தடுக்க மும்முரம்..!!
இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!