புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் மே 5ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தையால்பேட்டையில் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விவேகானந்தர் என்பவர் சிறைச்சாலையிலேயே உயிரிழந்தார். கருணாஸ் என்பவர் தற்போது உயிரோடு இருக்கிறார். அவருக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் இதற்கான தீர்ப்பு மே 5ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி மார்ச் 2024 இரண்டாம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. போலீசாரிடம் புகார் அளித்ததோடு பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு பகுதிகளில் சிறுமியை தீவிரமாக தேடினர். அப்போது வீட்டின் அருகேயுள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது புதுச்சேரி மட்டுமல்லாமல் நாட்டை உலுக்கிய குற்றமாக மாறியது. பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
இதையும் படிங்க: மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!
இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் மற்றும் விவேகானந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் இன்று அதற்கான தண்டனை வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. குற்றப்பத்திரிகயை வாசித்து பார்த்த நீதிபதி சுமதி, சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி எனவும் தண்டனை விவரம் வரும் ஐந்தாம் தேதி என வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!