பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனை குறளகம் முதல் கோட்டை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். குறளகம் வருகைக்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்தே போலீசார் அவர்களை கைது செய்தனர். சாலையில் அமர்ந்து போராடிய தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர். போராட்டத் தொடங்குவதற்கு முன்பே கைது செய்யப்பட்டது ஏனென்று கேட்ட தூய்மை பணியாளர்கள் பேருந்தில் ஏற்றினால் குதித்து விடவும் என்று எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: குட் நியூஸ்... தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்...!
சாலையில் அமர்ந்து போராடிய தூய்மை பணியாளர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது திமுக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும், மாநகராட்சிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கைது நடவடிக்கை என்பது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தூய்மை பணியாளர் ஒருவர் மயக்கமடைந்தார். பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் போராடிய நிலையில் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மெரினாவில் பரபரப்பு..!! போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்..!! குண்டுக்கட்டாக கைது..!!