நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.
இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் கட்சியை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொள்வது வழக்கம்.

இந்த முறையும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இதையும் படிங்க: விஜய், சீமானால் திமுகவிற்கு பாதிப்பா?... சற்றும் யோசிக்காமல் கருணாஸ் கொடுத்த ரிப்ளே...!
அப்போது பேசிய சீமான், எந்த கட்சி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வாங்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று தேர்தல் ஆணையமே கூறி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். சிறு குழந்தைகள் கூட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று சீமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!