சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையரகம் வந்து டாஸ்மாக் கடைகள் மற்றும் எஃப்எல்2 உரிமம் பெற்ற கிளப் வளாகங்களில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. குறிப்பாக தமிழக முதல்வர் விஜய் இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது. அதேபோன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை வந்து தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில, இந்த சுற்றறிக்கையானது கொடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளோட பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம் எனவும், அதன்படி வந்து கல்லூரிகள் பள்ளிகள் விடுதிகள் பேருந்து நிலையம் அருகே தொடர்ந்து சோதனைகளை நடத்த வேண்டும் என கலால் ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது. போதை பொருள் மற்றும் சட்ட விரோத மது விற்பனையை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது .தன்னார்வ அமைப்புகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோருடைய உதவியுடன் ரகசிய தகவல் வலையமைப்பை உருவாக்கவும் உத்தரவில் பிறப்பி க்கப்பட்டிருக்கிறது.
கள்ளச்சாராயம் தயாரிப்பு, கடத்தல் மற்றும் போதை பொருள் சேமிப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு, ரயில்வே போலீஸ் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் மற்றும் எஃப்எல்2 கிளப்புகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!
அதே போன்று 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும், மது பாட்டில்களில் உள்ள எம்ஆர்பியை மீறி விற்பனை செய்தால் சட்ட விரோத பார்கள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த மது விற்பனையை தடுப்பதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்திரவு துறை ஆணையர் கார்த்திகா தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். இந்த நடவடிக்கையை யாரும் வந்து அதிகாரிகள் வந்து பின்பற்றப்படவில்லையனால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!