தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாபூர், பிஸ்மில்லா காலனியைச் சேர்ந்த சலாம் சயீத்தின் மகன் சலாம் அகமது (21), ஷாஹீன் நகரில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் பணிபுரிகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலிருந்து வந்த இஷாக்கின் குடும்பம், அதே குடியிருப்பில் வசித்து வந்தனர். அவரது மகள் ரெஹானா காதுன் (20), அதே கன்வென்ஷன் ஹாலில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.
இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மலர்ந்தது. அவர்கள் சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ரெஹானா அடிக்கடி வந்து எப்போது திருமணம் செய்துகொள்வாய் என்று கேட்பதுண்டு. அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை அகமதுவின் வீட்டில் இருவரும் சந்தித்தபோது மீண்டும் திருமணம் குறித்துப் பேசினர். தான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறியும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், இந்த விஷயத்தை வெளியே கூறுவதாக ரெஹானா கூறியுள்ளார்.
இதனால் அகமது திங்கட்கிழமை அதிகாலையில் கத்தியால் ரெஹானா தாக்கி, வயிற்றில் ஏழு முறை குத்திக் கொன்றான். பின்னர் உடலை ஒரு சாக்குப்பையில் சுற்றி தூக்கிக்கொண்டு குளத்தில் வீச நினைத்தான், ஆனால் ஒருவரால் அது சாத்தியமில்லை என்பதால், தன் தாய் ஆயிஷாவிடம் உதவி கேட்டான். அப்போது கன்வென்ஷன் ஹாலில் வேலை செய்யும் தன் உறவினரிடமும் இதே விஷயத்தைச் சொல்லி, கொலையின் விவரங்களைத் வெளியே தெரியாமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டான்.
இதையும் படிங்க: தனியாக வசித்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மைனர் சிறுவன் தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்...!
ஆனால் அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் பாலப்பூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவர்களைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற நிலையில் சலாம் அகமதுவை போலீசார் கைது செய்தனர். ரெஹானா உடல் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உதவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!