வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், இயலாமையை மூடி மறைக்கவே தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது என கூறினார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எஸ்கேப் ஆக தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் விமர்சித்தார். தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்றும் கூறலாம் என்றார்.
தவெக அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல வெற்று அறிக்கை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் தவெக அரசு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகவும் திமுக ஆட்சியின் 5 வருட காலத்திற்கு மட்டும் வெள்ளை அறிக்கை ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று கேட்டுள்ள அவர், யாரை காப்பாற்ற அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை? தீர்ந்து போன சக்தி என அதிமுகவை கூறிய தவெக ஏன் இப்படி ஒரு நிலைப்பாடு? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!
மேலும், எதிர்காலத்தில் தேவைப்படுவார்கள் என்பதால் அதிமுகவை காப்பாற்ற முயற்சியா? என்றும் கேட்டார். வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களிடம் இருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை என்று தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, தவறான, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார். ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது தவெக எனவும் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?