திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது அது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வு நடைபெறுவதற்காக அனுமதி கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
முதலில் வழக்கம் போல் மலைக்குக் கீழ் உள்ள பள்ளிவாசலில் கொடியேற்றப்பட்டது. பெரியார் ரத வீதியில் உள்ள தர்காவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, 16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலில் இருந்து கொடிமரத்துடன் ஊர்வலம் சென்ற நிலையில் மலையில் ஏற்றப்படும் கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலைக்கு கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கோட்டை தெரு பொதுமக்கள் அவர்கள் மலை மீது அனுப்பப்பட்டதை போல நாங்களும் மலைக்குச் செல்வோம் என்று வாக்குவாதம் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: திமுக மதவெறியால் ஒரு உயிரே போச்சு... எறிவது தீபத்தூண் அல்ல தமிழர்கள்... நயினார் கண்டனம்...!
இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது. ஆதார் அட்டை மற்றும் செல்போன் என்னை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என காவல் உதவி ஆணையர் சசி பிரியா தெரிவித்துள்ளார். தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க விசாரணை நடைபெற்ற வருவதால் முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12:30 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல் காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு திருவிழா நடத்தக்கூடாது... இஸ்லாமியர்களை மீண்டும் மீண்டும் சீண்டும் இந்து அமைப்புகள்...!