தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் இன்று (ஜனவரி 14) வெளியிட்டுள்ள அரசாணையின்படி, சுற்றுலாத் துறை, டாஸ்மாக் (TASMAC), தொழில்நுட்பக் கல்வித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முக்கியமான துறைகளான சுற்றுலா மற்றும் டாஸ்மாக்கில் புதிய ரத்தம் பாய்ச்சும் வகையில் இந்த இடமாற்றங்கள் அமைந்துள்ளன.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜெ.இன்னசெண்ட் திவ்யா, இ.ஆ.ப.: தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இருந்த இவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப.: சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குநராக இருந்த இவர், தற்போது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!
முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.: டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த இவர், தற்போது தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ச.உமா, இ.ஆ.ப.: சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராக இருந்த இவர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
த.ரத்னா, இ.ஆ.ப.: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலாளராக இருந்த இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கே.எம். சரயு, இ.ஆ.ப. அவர்கள் விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப் பணியிடத்தை நிரப்பும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசின் இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: "ஹேப்பி பொங்கல்.. போகிக்கும் லீவு கொடுத்தாச்சு! ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு அதிரடி!