இன்னும் 30 ஆண்டுகள் குடித்தால் தமிழர்கள் DNA-வே அழியும்” என்ற அதிர்ச்சி தகவலை பொது சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கை 1971-ல் தளர்த்தப்பட்டதிலிருந்து இரண்டு தலைமுறைகளாக மக்கள் மது அருந்தி வருவதால், அடுத்த தலைமுறையினரின் மரபணுக்களில் (ஜீன்கள்) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கையில், “தொடர்ந்து மூன்றாவது தலைமுறையும் மது அருந்தினால், குழந்தைகள் பிறக்கும்போதே மதுவுக்கு அடிமையாகப் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் DNA மாற்றம் அடைந்து பெரும் பேரிடர் உருவாகும். இன்னும் 30 ஆண்டுகள் இந்தப் பழக்கம் தொடர்ந்தால் தமிழ்ச் சமூகமே அழிந்துவிடும்.

மதுவை முழுமையாக ஒழிப்பதே ஒரே தீர்வு” என்று குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.மது அருந்தலின் தலைமுறைப் பாதிப்புமது அருந்துதல் உடலின் பல அமைப்புகளைப் பாதிப்பதாக அறிவியல் உலகம் ஏற்கெனவே எச்சரித்து வருகிறது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்தினால் Fetal Alcohol Spectrum Disorders ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: குடியைக் கெடுத்த குடி...!! - தலைக்கேறிய மதுபோதை... வேலூரில் பெற்ற தந்தைக்கு மகனால் நேர்ந்த பயங்கரம்...!
இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி, உடல் அமைப்பு மற்றும் நடத்தையைப் பாதிக்கும். சில ஆய்வுகள், அதிக மது அருந்துபவர்களின் DNA-யில் எபிஜெனெடிக் மாற்றங்கள் (methylation போன்றவை) ஏற்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மாற்றங்கள் சில சமயங்களில் தற்காலிகமல்லாமல் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், தந்தையின் மது அருந்தல் கூட கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: President's Police Colour Award..! தேசிய அங்கீகாரம்! புதுவைக்கு வருகை தரும் அமித்ஷா..!!