தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் மிக முக்கிய சக்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உடன் கரம் கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சீனியர் தலைகளுக்கு தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருந்தாலும், திமுகவுடன் கூட்டணியைத் தொடரவே டெல்லி தலைமை உறுதியாக இருந்ததால் தவெக - காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
அதனையடுத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், ஒருபுறம் சிபிஐ விசாரணை விவகாரம், மறுபுறம் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சினைகள் என அரசியல் அழுத்தங்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டன.
நேற்று முன்தினம் விஜய் டெல்லி சென்ற போது கூட பாஜகவுடன் அவர் கூட்டணி நடத்த உள்ளார். கூட்டணி தொடர்பாக அவரது கட்சி மாவட்ட செயலாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க விஜய் முடிவெடுத்தால் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பெரும்பாலானவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!
100 சீட் + துணை முதலமைச்சர் பதவி, 45 சீட் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என மாறி, மாறி தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இல்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், NDA உடன் கூட்டணி கிடையாது என தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம் வெளியிட்டிருக்கிறார்.
மேலும், இந்த கூட்டணி விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், தவெகவுக்கு அதிக தொகுதிகள் வழங்கலாம் என்ற கருத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பிலிருந்து வரவில்லை; மாறாக பாரதிய ஜனதா கட்சி தரப்பில் தான் கிரீன் சிக்கனல்கள் தரப்பட்டன. விஜயிடம் 45 சீட் + துணை முதலமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு அதிமுக எந்தவித பதிலும் தரவில்லை என்றாலும், பாஜகவிற்கே 25 சீட்டுகளை மட்டுமே ஒதுக்கவிருந்த அதிமுக தலைமை, நேற்று முளைத்த புதிய கட்சியான தவெகவை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை எனக்கூறப்படுகிறது.
குறிப்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என எந்த பதவியையும் தரக்கூடிய எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதும் பாஜகவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் கசப்பு ஏற்படவே,
இதுவே அதிமுகவில் உள்ள சில தலைவர்களிடையே கூட கருத்து வேறுபாடு இருக்கலாம் என்ற அரசியல் புரிதலை உருவாக்கியுள்ளார். தற்போது தவெக தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கம் மூலம் அந்த விவகாரத்திற்கு ஒரு வகையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேசி பேசியே சிலிர்க்க வைச்சாரே... 60 பேரை அம்போன்னு நட்டாற்றில் விட்ட விஜய்... அதிமுக கொடுத்த ஆஃபர்...!