தமிழக பட்ஜெட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள். நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்ததாவது: சென்னை பெருநகர் பகுதியின் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்தும் நோக்கில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA), 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய Third Master Plan (2027–2046)-ஐ தயாரித்து வருகிறது.
சென்னை பெருநகர் பகுதியின் வேகமான விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த திட்டமிடலின் தேவையை உணர்ந்து, 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகர் பகுதிக்காக Comprehensive Master Plan ஒன்றை அரசு தயாரிக்க உள்ளது.
இந்தத் திட்டம், நீண்டகால நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டும் வரைபடமாக செயல்படும். மேலும், இந்த முழுத் திட்டம் Global Best Practices மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பெருநகர் திட்டமிடல் கட்டமைப்புகளுடன் ஒப்பிட்டு தர மதிப்பீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ₹25 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இதையும் படிங்க: வெற்றி லேப்டாப் முதல் தங்க மோதிரம் வரை... முதல் பட்ஜெட்டில் அதிரடி மழை..! நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு..!!
பிளாட்டுகள் மற்றும் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிகள் தமிழ்நாட்டில் CMDA, DTCP (Directorate of Town and Country Planning), Rural Local Bodies மற்றும் Urban Local Bodies உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, CMDA, DTCP, Rural Local Bodies மற்றும் Urban Local Bodies ஆகிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளமான Single Platform for Efficient and Expedited Development (SPEED) அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் கட்டிட மற்றும் திட்ட அனுமதிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ₹40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வேகமான நகர்மயமாக்கலால் அதிகம் பாதிக்கப்படும் நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு அடிப்படை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுதல், பயனாளிகள் சுயமாக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தனி வீடுகள் கட்டுதல், வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ், பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வரும் 24,131 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் இந்த ஆண்டில் நிறைவடையும். மேலும், 14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ₹1,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும், ஆற்றல் மிக்க இளைஞர்களும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான குடியிருப்பு வசதியைப் பெறுவதை இந்த அரசு தனது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.
இதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board) மூலம் முதற்கட்டமாக சென்னை பெருநகர் பகுதியில் "Metropolitan Youth and Family Housing Scheme – My Home" என்ற முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த ஏழு ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.
இந்த லட்சியத் திட்டத்தின் மூலம் Public–Private Partnership (PPP) முறையில் சுமார் ₹15,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும். இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், Tamil Nadu Shelter Fund மூலம் ₹3,500 கோடி Viability Gap Funding (VGF) வழங்கப்படும்.
இந்தக் கூட்டாண்மை அடிப்படையிலான அணுகுமுறையுடன் Digital Rental Voucher முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் இளைஞர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ற பாதுகாப்பான, கண்ணியமான குடியிருப்புகளை எளிதில் பெறும் சூழல் உருவாக்கப்படும்.
இந்த முன்னோடி முயற்சி, சென்னை பெருநகரத்தை அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், உயர்ந்த வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு வசதிகளை வழங்கும் மாநகரமாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றும்.
ரூ.3,500 கோடியில் வெற்றி வீடு திட்டம் செயல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், அலகுத் தொகை 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிப்பு
2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ₹8,852 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?