கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்து மீறியதாக புகார் எழுந்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே கீழ்குளம் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகத்தில் தலைவியாக இருந்த ஒருவர் சரளா கோபா;. இவர் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு வராத நிலையில் அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் சுபின் மற்றும் ஒன்றிய செயலாளர் உட்பட ஏராளம நிர்வாகிகள் அலுவலகத்திற்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் உதவியுடன் அலுவலரின் அறையைத் திறந்து உள்ளே சென்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் படத்தை அகற்றியதுடன் அங்கு அவர்கள் கொண்டு வந்த தற்போதைய முதல்வரின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த பேரூராட்சி தலைவரின் அறையில் இருந்த லெட்டர் பேட் மற்றும் சீல் உள்ளிட்ட பொருட்களையும் சிலர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!
அதுமட்டுமின்றி தவெகவினர் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, தற்போதையை முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மாற்றியதை வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ தற்போது அனைத்து சோசியல் மீடியாவுலும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் உட்பட பல தவெகவினர் கும்பலாக பேரூராட்சி தலைவி சரளாவின் அறைக்குள் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்த சக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக பேரராட்சி தலைவரின் அறைக்குள் புகுந்து அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி தற்போது சரளா கோபால், புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!