திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த செட்டிமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேநீர் கடை இயங்கி வருகிறது. சல்மான் என்பவர் தேநீர் கடையை நிர்வகித்து வரும் நிலையில் கடைக்குள் வந்து சிலர் தேநீர் மற்றும் சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கடை ஊழியர்கள் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் அங்கிருந்த சல்மானை கடைக்கு வெளியே வரவழைத்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சல்மானை சரமாரியாக தாக்கி காலால் எட்டி உதைக்கின்றனர். இதில் நிலைகுலைந்த சல்மான் செய்வதறியாது திகைத்து நின்றார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் கடை நிர்வாகி சல்மானை மிரட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தன் மீது தாக்குதல் நடத்திய தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி இணை அமைப்பாளர் விஷ்ணு உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது சல்மான் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!
மேலும் தாக்கும்போதே தன்னை தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பொறுப்பில் இருப்பதாகவும் கூறி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட சல்மான் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேநீர் கடையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை செங்குன்றம் அருகே செட்டிமேடு பகுதியில் தேநீர் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் – CCTV காட்சிகள் வெளியானது..!*
சென்னை மாதவரம் தவெக MLA விஜய் பிரபுவின் ஆதரவாளர்கள் என தகவல்..
சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் வழக்கு பதிவு செய்த போலீசார்… pic.twitter.com/5FVy254u8t
— Jaya Kanagaraja (@Jayakanagaraja) June 2, 2026
இதையும் படிங்க: "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!