இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான எல்லை விவகாரங்கள் முற்றிலும் இருதரப்பு சார்ந்தவை. இதில் தலையிடப் பிரிட்டன் உள்ளிட்ட எந்தவொரு மூன்றாவது தரப்பிற்கும் (Third Party) எள்ளளவும் இடமில்லை" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்பொழுது மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளது.
அண்மையில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து, உத்தராகண்ட் மாநில எல்லையில் உள்ள லிபுலேக் கணவாய் (Lipulekh Pass) வழியாக 2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற 'கைலாஷ் மானசரோவர் யாத்திரையை' மீண்டும் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இந்த அறிவிப்பிற்கு நேபாளத்தின் புதிய பிரதமரான பாலேந்திர ஷா (Balendra Shah) கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், "லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவின் காலத்திலிருந்தே தீர்க்கப்படாமல் உள்ளதால், இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரிட்டன் (UK) மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குத் தூதரக ரீதியாகக் கடிதம் எழுதியுள்ளோம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார். நேபாள பிரதமரின் இந்த சர்வதேச அளவிலான நகர்வு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள பிரதமரின் இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இன்று நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அவர்கள் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் எல்லைப் பிரச்சினைகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள ஏற்கனவே வலுவான இருதரப்பு தூதரக வழிமுறைகளை (Bilateral Mechanisms) வைத்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான 98 விழுக்காடு எல்லைப் பகுதிகள் ஏற்கனவே மிகத் துல்லியமாக வரையறுக்கப்பட்டுவிட்டன; எஞ்சியுள்ள சில பகுதிகளுக்கு மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!
இப்படி இருக்கும்போது, பிரிட்டிஷ் இந்தியக் காலத்தைக் காரணம் காட்டி, இந்த விவகாரத்திற்குள் பிரிட்டனை இழுக்க முயல்வது முற்றிலும் தேவையற்றது. இதில் மூன்றாவது தரப்பின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது" என்று மிக ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் இந்தத் திட்டவட்டமான மற்றும் கடுமையான பதிலடி, நேபாளத்தின் சர்வதேச அரசியல் யுக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு அவசர எச்சரிக்கை! ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!