ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு செல்வந்த வணிகக் குடும்பத்தில், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தார் தந்தை பெரியார். அவரது பெற்றோர் வெங்கடப்பா நாயக்கரும், சின்னத் தாயம்மாளும் ஆவர். இளம் வயதிலேயே, பெரியார் சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சாதி அடக்குமுறைகள், மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை கவனித்து, அவற்றை எதிர்க்கும் மனப்பான்மையைக் கொண்டவர்.
தந்தை பெரியார் என்று அன்புடன் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பிறந்த நாள், தமிழ்நாட்டின் சமூக மாற்ற இயக்கங்களில் மிக முக்கியமான ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. பெரியார், சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, மற்றும் சாதி ஒழிப்பு ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். இந்த நாள், தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் உள்ள திராவிட இயக்க ஆதரவாளர்களால் மிகுந்த மரியாதையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

பெரியாரின் பிறந்த நாள், அவரது மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றான பெண்ணுரிமைக்கு அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்கிறது. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சம உரிமைகளை வலியுறுத்தியவர் பெரியார். அவர் திருமண முறைகளை சீர்திருத்தவும், விதவை மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை போன்றவற்றை ஊக்குவிக்கவும் தொடர்ந்து பாடுபட்டார்.
இதையும் படிங்க: உலகமயமானார் கருஞ்சட்டைக்காரார்!! ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் பெரியார் படம் திறப்பு!! ஸ்டாலின் பெருமிதம்!
தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது திருவருவச் சிலைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பனையூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை,சமூக சீர்திருத்தக் கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்போ WFH தலைவர் இல்ல.. WEEKEND தலைவர்.. விஜயை கலாய்த்த தமிழிசை..!!