தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தொகுதியில் தீவிர பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காட்டூரில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காட்டூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அன்பில் மகேஷ் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராவார். அவர் கடந்த காலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதிலும் கடுமையாக உழைத்துள்ளார்” என்று பாராட்டினார்.
தமிழகம் முழுவதும் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து வரும் நிலையில், கட்சித் தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் கடும் நெருக்கடி!! சறுக்குவாரா? தேறுவாரா? திமுகவுக்கு சிக்கல்!

உதயநிதி ஸ்டாலின் தனது பிரசார உரையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கடந்த காலப் பணிகளை சுட்டிக்காட்டி, அவருக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். திருவெரும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் மீண்டும் வெற்றி பெறுவார் என்றும், அதன் மூலம் தொகுதி மேலும் வளர்ச்சி அடையும் என்றும் உதயநிதி நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் திருச்சி மாவட்டத்தில் உதயநிதியின் பிரசாரம் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். திருவெரும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வலுவான ஆதரவு கிடைக்கும் என்று தி.மு.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு Bye சொல்ல வேண்டிய நேரம் இது!! உதயநிதியால் உணர்வுகள் புண்படுவதாக பியூஷ் கோயல் ஆவேசம்!