தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் களம் கண்டு வெற்றி பெற்ற திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நெரிடையாக நன்றி தெரிவித்தார்.
திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், பதவிப் பொறுப்புகளை ஏற்ற கையோடு தொகுதி மக்களைச் சந்திக்க விரைந்தார். திறந்த ஜீப்பில் அமர்ந்தபடி தொகுதியின் முக்கியச் சாலைகள் மற்றும் குறுகிய தெருக்களுக்குச் சென்ற அவர், கை கூப்பி மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
உதயநிதியைக் கண்டதும் இல்லத்தரசிகளும், இளைஞர்களும் தங்களது வீட்டின் வாசல்களில் நின்றபடி அவர் மீது மலர்களைத் தூவி உற்சாகமாக வரவேற்றனர். பல இடங்களில் பெண்கள் அவருக்கு ‘ஆரத்தி’ எடுத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெற்றிக்குக் காரணமான உங்களை எப்போதும் மறக்க மாட்டேன்; தொகுதியின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் வலுவாக ஒலிப்பேன்" எனத் தொகுதி மக்களிடம் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் தோல்வியடைந்த சூழலில், சேப்பாக்கம் தொகுதி மக்கள் உதயநிதிக்கு அளித்துள்ள இந்த வெற்றி திமுக-விற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி அமரவுள்ள நிலையில், அவரது சொந்தத் தொகுதியில் கிடைத்துள்ள இந்த உற்சாக வரவேற்பு அவருக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. தேர்தல் முடிந்துவிட்டது, இனி மக்கள் பணிதான் முக்கியம்" என்கிற வாசகத்திற்கேற்ப, பதவியேற்ற மறுநாளே களத்திற்குச் சென்ற அவரது செயலை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று அதிரடி காட்டி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள உதயநிதியின் இந்த மக்கள் சந்திப்பு, வரும் நாட்களில் சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!