கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சை மலை எஸ்டேட்டின் தென்பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் - மோனிகா என்பவரது மகள் ரோஷினிகுமாரி. 7 வயது சிறுமி ரோஷினி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சிறுத்தை ஒன்று தாய் மோனிகாவின் கண்முன்னே சிறுமியை கவ்விச் சென்றது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மோனிகா செய்வதறியாது, அருகில் உள்ளவ தகவல் கொடுத்தார். பிறகு வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சிறுத்தைச் சென்ற வழியில் சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

இரவு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் தேடிவந்த நிலையில், 18 மணிநேர தேடுதலுக்கு பிறகு, எஸ்டேட் உள்ள பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கால்கள் இல்லாத நிலையில், தலையோடு உடல் இருந்துள்ளது. இதனைக்கண்ட வனத்துறையினர் உடலை மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!