தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. இந்தத் தேர்தலின் முடிவு தொங்கு சட்டசபை (Hung Assembly) எனப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.
இது தமிழக அரசியலில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவமாகும். தொங்கு சட்டசபை என்பது, ஒரு மாநில சட்டமன்றத்தில் எந்த ஒரு தனிக்கட்சியோ அல்லது முன்கூட்டிய கூட்டணியோ ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறாத நிலையைக் குறிக்கும். தமிழ்நாடு சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இந்த எண்ணிக்கையை எந்தக் கட்சியும் எட்டாவிட்டால், அது தொங்கு சட்டசபை என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், அதிக இடங்களைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார். சிறிய கட்சிகள் அல்லது சுயேட்சைகளின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம். இது அரசியல் மாற்றங்கள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு வழிவகுக்கும். 2026 தேர்தலுக்கு முன், தமிழக அரசியல் திமுக மற்றும் அதிமுகவின் இரு துருவங்களாகவே இருந்தது. ஆனால், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2024 பிப்ரவரியில் உருவாகி, 2026 தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இது ஒரு துணிச்சலான முடிவு. பாரம்பரியக் கட்சிகளின் கூட்டணி அரசியலை சவாலுக்கு உள்ளாக்கியது.
இதையும் படிங்க: விஜய் ஆட்சி...? - மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தொங்குசபையில் தொங்கு நிலை ஏற்பட்டு இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது என்றார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஷாநவாஸ்-க்கு சீட் தராதது ஏன்? - இந்த ஒரே ஒரு காரணம் தான்.. திருமா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு...!