எடப்பாடி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு முடிக்கும் தருவாயில், அங்கு வீரப்பன் வேடமிட்ட நபருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் நேற்று இரவு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துவிட்டு, அங்கிருந்து புறப்படத் தயாரான நிலையில் இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாகப் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் ஒரு திறந்தவெளி வாகனத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் கோவிந்தராஜ் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். அந்த வாகனத்தில் பாடல்களை ஒலிக்கச் செய்தவாறு வீரப்பன் போன்றே வேடமணிந்த நபர் ஒருவரை அழைத்து வந்தனர்.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை..!
வீரப்பனின் அதே மிடுக்கான மீசை மற்றும் தோற்றத்துடன் அந்த நபர் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். அதிமுக பொதுச்செயலாளர் அங்கிருக்கும் போதே மாற்று கட்சியினர் வீரப்பன் வேடமிட்ட நபருடன் வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவாக வேட்பாளரின் வாகனத்தை அங்கிருந்து காவல்துறையினர் மற்றும் நிர்வாகிகள் உடனடியாகத் வாகனத்தை திருப்பி எடுத்துச் சென்றனர். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையைக் காண வந்திருந்த அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வீரப்பன் வேடமிட்ட நபரை ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். இந்தச் சம்பவத்தால் எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!