நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கொடியேற்ற நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.45 மணியளவில் தேர்பவனி தொடங்கி, தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், சரியாக 6.50 முதல் 6.55 மணி அளவில், கொடியானது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து, தேர்பவனியும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கொடிமரத்தில் ஏற்றுவதற்கான நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் இருதயராஜ் தலைமையில், சகாய தந்தை மறைமாவட்டர் சகாயராஜ் இந்தக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையும் படிங்க: விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!
அப்போது சரியாக 6.55 மணி அளவில் கொடியானது கோபுரத்தின் உச்சியை அடைந்தபோது, வழக்கம்போல் வண்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்ற நிகழ்வின்போது இந்த வண்ண விளக்குகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
கொடியேற்றம் முடிந்தவுடன் வண்ண பலூன்கள் பறக்க விடப்படுவதும், அதனைத் தொடர்ந்து புறாக்கள் பறக்க விடப்படுவதும் வழக்கமாக நடைபெறும்.
அப்போது ஆலயத்தின் மேல் பகுதியில் இருந்து வானவேடிக்கைகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில், கொடிக்கம்பத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த பலூன்கள் மீது பட்டாசிலிருந்து வந்த நெருப்புப் பொறி பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் திடீரென பலூன்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. இந்தச் சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
#JUSTNOW || வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு
புஸ்வானத்தின் தீப்பொறி பட்டு ஹீலியம் பலூன்கள் வெடித்து தீப்பற்றியதாக தகவல்#Velankanni | #VelankanniMadha | #Fire | #Baloon | #PolimerNews pic.twitter.com/5kTrxvN0AD
— Polimer News (@polimernews) August 29, 2026
இதையும் படிங்க: வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!