கச்சா எண்ணெய் விலை உயர்வோடு லாரி வாடகை உயர்வும் சேர்ந்ததால் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
டீசல், சமையல் காஸ், கட்டுமானப் பொருட்கள் என ஒவ்வொன்றாக வரும் இந்த நெருக்கடியினால் லாரி வாடகை உயர்வால் முழுமையடைந்து, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை மேலும் சுமையாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனவே தமிழக அரசு ஒன்றிய அரசிடம் பேசி சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ள வேல்முருகன், எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் உர விலை உயர்வு, லாரி வாடகை உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குடும்ப மாதாந்திர செலவு கணிசமாக அதிகரிக்கும். மூலப்பொருட்கள் உயர்வால் வீடு கட்டும் செலவு மேலும் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் கொண்டு செல்லும் உரம், விதை, விளைபொருட்கள் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், சரக்கு போக்குவரத்துக் கட்டணம் உயர்வால் சிறு வியாபாரிகளின் இலாப விகிதம் குறையும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!
எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்யவும், எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் உர விலை உயர்வு, லாரி வாடகை உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: “மன்னிப்பு கேட்கல...” - அமைச்சர் ஷாஜகானுக்கு வார்னிங் கொடுத்த திமுக... பாபநாசம் முழுக்க பரபரப்பு...!