சென்னையில் எம்எல்ஏக்களுக்கான புத்தாக்க பயிற்சி நிகழ்ச்சியை முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற சபாநாயகர் பிரபாகர் பேசியபோது, தமிழக அரசை “விஜய் மாடல் அரசு” எனப் புகழ்ந்து பாராட்டினார்.
சபாநாயகர் பிரபாகர் கூறியதாவது, “தற்போது தமிழகத்தில் இருப்பது விஜய் மாடல் அரசு. ஒரு புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியவர் முதல்வர் விஜய். எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது. மக்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது” என்றார்.
புதிய எம்எல்ஏக்களின் கன்னி உரையில் யாரும் குறுக்கிட மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட சபாநாயகர், தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “பழைய வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும். எனது கன்னி பேச்சின்போது சலசலப்பு ஏற்பட்டபோதும் யாரும் குறுக்கிடவில்லை” என்று நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!
மேலும், “நாட்டு மக்கள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர். சட்டசபை வரலாற்றை நூலகத்துக்குச் சென்று படிக்க வேண்டும். தான் செல்லும் இடமெல்லாம் வெற்றி இடமாக மாற்றும் சக்தி முதல்வர் விஜய்க்கு உண்டு. ஒரு மாபெரும் சக்தியாக அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார்” என சபாநாயகர் பிரபாகர் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

இந்தப் பயிற்சி நிகழ்ச்சி புதிய எம்எல்ஏக்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள், சட்டம் இயற்றும் செயல்முறை, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தப் பயிற்சி எம்எல்ஏக்களின் செயல்பாட்டை மேலும் திறம்படச் செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகரின் பாராட்டு த.வெ.க., எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழகம் புதிய உயரங்களைத் தொடும் என அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஒரு புன்னகையால் அரசியல் களத்தை மாற்றியமைத்த விஜய்யின் பயணம் இன்னும் பல சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!