நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜய லட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தானே சென்று தலையைக் கொடுத்தது போல, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பு கோரியுள்ளது. வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றமோ, 3 மாத காலத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சீமானுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை, அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதனை கிழித்த விவகாரம், களேபரமாக மாறியது ஒருபக்கம் இருக்கும்போது, ஆதரவாளர்கள் சூழ விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஆளாகினர் சீமான்.

சீமான் கைதாகி விடுவாரோ என்ற பேச்சுக்கள் அடிப்பட்ட நிலையில், அவரை கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்து விட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்த்தப் படுவதாகவும், விசாரணையை நிறுத்தி வைக்குமாறும் சீமான் தரப்பு கோரியது.
இதையும் படிங்க: விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல... வேடிக்கை காட்டும் சிங்கம்! சீமான் செம கலாய்
சமாரசமாக பேசி முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறி, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. பாலியல் வழக்கில் சீமானுக்கு எதிராக கூடுதல் மனு தாக்கல் செய்ய நடிகை விஜயலட்சுமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. சீமான் தொடர்ந்து தன்னை குறித்து அவதூறாக பேசுகிறார் என்றும் அவதூறு பிரச்சாரம் தொடர்பாக கூடுதல் மனுத் தாக்கல் செய்கிறோம் என்றும் நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீமான் அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது. திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் என சீமான் மீது நடிகை தரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது, சீமான் மீது விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: மாஸ் காட்டுராப்ல சீமான்… மலைகளுக்கும், தண்ணீருக்கும் மாநாடு நடத்தப் போறாராம்!