வங்கக் கடலில் வரும் 22 ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தம் வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வலுவடையும் என்றும் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாலையும் நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் 22 ஆம் தேதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளுக்கப்போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...! முக்கிய அறிவிப்பு...!
23ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூரில் 24 ஆம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!