புதுடெல்லி: யோகா வகுப்பில் சேர்ந்த இளம்பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்து, இறுதியில் கொலை முயற்சியும் செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகேஷ் சர்மா (யோகா பயிற்றுவிப்பாளர்) என்பவர் 2020-ம் ஆண்டு வாக்கில் டெல்லியில் யோகா வகுப்பு நடத்தி வந்தார். அந்த வகுப்புக்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு தெரியாமல், அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை ரகசியமாக எடுத்து வைத்திருந்தார். அந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து முதலில் 2 லட்ச ரூபாய் பறித்தார்.
பின்னர் பணம் தர மறுத்ததால், அந்தப் பெண்ணின் கணவருக்கு அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி, 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார். இதையும் அவர்கள் பொருட்படுத்தாததால், ஆத்திரமடைந்த ராகேஷ் சர்மா, அந்தப் பெண்ணைக் கொல்ல முயற்சி செய்தார்.
இதையும் படிங்க: டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!

இந்த சம்பவம் தொடர்பாக பாலம் விஹார் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராகேஷ் சர்மாவை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்த ஆபாச புகைப்படங்கள் அனைத்தையும் போலீசார் அழித்துவிட்டனர்.
விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. யோகா வகுப்பு நடத்துவதற்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்த ராகேஷ் சர்மா, ஜாமின் பெற்ற பிறகு கொரோனா காலத்தில் யோகா ஆசிரியராக மாறி, பல பெண்களிடம் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகா வகுப்புகளில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!